குறுகிய காலத்தில் நிறைவடையும் தொடர்! காரணம் என்ன?

ரஞ்சனி தொடர் நிறைவு தொடர்பாக...
ரஞ்சனி தொடர்.
ரஞ்சனி தொடர்.
Published on
Updated on
1 min read

ரஞ்சனி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நடிகை ஜீவிதா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சந்தோஷ் நடித்துவருகிறார்.

மேலும் இத்தொடரில் ஸ்ரீலேகா, ஸ்ரேயா அஞ்சான், ஹேமந்த் குமார், கிரிஷ், சுதர்சனம், சல்மான், ரஞ்சனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இத்தொடரின் மையக்கரு. இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ரஞ்சனி தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள்(climax scenes) விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் விரைவில் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: புதிய தொடரில் ரேஷ்மாவுடன் இணையும் சுந்தரி சீரியல் நடிகர்!

புதிய தொடர் வருகை மற்றும் டிஆர்பி புள்ளிகள் குறைவு போன்ற காரணங்களால் ரஞ்சனி தொடரை விரைவில் முடிக்க தொடர் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சில நாள்களுக்கு முன்பு ரஞ்சனி தொடர் 100 நாள்களை நிறைவு செய்த நிலையில், இத்தொடர் நிறைவடையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com