உன்னதமான இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் எண்ணெய் வண்ண ஓவியம் (ஆயில் பெயிண்டிங்) ஒன்று ரூ.167.20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
ஓவியர் ரவி வர்மா 1890ல் அன்னை யசோதை உடன் குழந்தை கிருஷ்ணர் இருக்கும் இந்த ஓவியம் இந்திய வரலாற்றிலேயே அதிக தொகைக்கு விற்பனையான ’நவீன இந்திய ஓவியம்’ ஆக புதிய சாதனை படைத்துள்ளது.
ராஜா ரவி வர்மாவின் ஓவியம் ரூ. 80 - 120 கோடிக்கு விற்பனையாகுமென இதனை விலைக்கு வாங்கிய சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சைரஸ் எஸ். பூனாவாலா கூறியிருந்தார்.
மும்பையில், சஃபரான் ஆர்ட் ஸ்போர்டிங் லைக் ஆக்சன் ஏலத்தில் அன்னை யசோதை உடன் குழந்தை கிருஷ்ணர் இருக்கும் ராஜா ரவி வர்மாவின் எண்ணெய் வண்ண ஓவியம் ரூ.167.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட நவீன இந்திய ஓவியமாக இது வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எம்.எஃப். ஹொசைன் கிராம் யாத்ரா ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு முதலிடத்தில் இருந்தது. தற்போது, அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூனாவாலா, “ராஜா ரவி வர்மா வரைந்த யசோதா, கிருஷ்ணாவின் ஓவியத்தை வாங்கியதற்கும் பாதுகாத்ததுக்கும் நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். நமது நாட்டின் புதையலை பொதுமக்கள் அடிக்கடி பார்வையிட வைக்க தகுதியுடையது என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அன்னை யசோதாவுடன் குழந்தை கிருஷ்ணர் இருக்கும் ஓவியம். - பிடிஐ
நவீன இந்திய ஓவியம் இவ்வளவு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்திய ஓவிய சந்தைக்கு மதிப்பு கூட்டுவதாகவும் சஃப்ரான் நிர்வாகத்தின் துணை நிறுவனர் கூறியுள்ளார்.
Summary
Raja Ravi Varma's 'Yashoda and Krishna' sells at record-breaking Rs 167.20 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








