9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மம்மூட்டி நடித்த சத்தா பச்சா! முதல் டிக்கெட்டை வாங்கிய மோகன் லால்!

“சத்தா பச்சா” படத்தின் முதல் டிக்கெட்டை நடிகர் மோகன் லால் வாங்கியுள்ளார்...

News image

மம்மூட்டி, மோகன் லால் - X

Updated On :20 ஜனவரி 2026, 4:58 pm IST

பிரபல மலையாள நடிகர் மோகன் லால் “சத்தா பச்சா” எனும் புதிய திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள புதிய படம் “சத்தா பச்சா”.

இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமான “சத்தா பச்சா” வரும் ஜன. 22 திரையரங்குகளில் வெளியாகின்றது.

இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (ஜன. 19) துவங்கியுள்ள நிலையில் முதல் டிக்கெட்டை நடிகர் மோகன் லால் வாங்கியுள்ளதாகப் படக்குழு சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில் பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

actor Mohanlal has purchased the first ticket for the new film "Chatha Pacha".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.