
திரிசூலி ஆற்றங்கரையில்... நேபாள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்!
பாலிவுட் நடிகர் சோனு சூட் செயலுக்கு குவிந்துவரும் வரவேற்பு குறித்து...

நேபாள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட் - படங்கள்: இன்ஸ்டா / சோனு சூட்
பாலிவுட் நடிகர் சோனு சூட் (53 வயது) நேபாள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ததுக்கு சமூக வலைதளத்தில் வரவேற்பு குவிந்து வருகிறது.
திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.
இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 1,252 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா்கள் 275 போ் உள்பட 4,875-க்கும் மேற்பட்டோர் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி இன்றுடன் 9-ஆவது நாளாகத் தொடர்கிறது.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் சோனு சூட் நேற்று நேபாளத்துக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்தார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நினைக்கமுடியாத இழப்புகள், உடைந்த வீடுகள், உடைந்த குடும்பங்கள், எப்போதுக்குமான மாற்றங்களை நிகழ்த்திய திரிசூலி ஆற்றுக்கு அருகில்தான் நின்று கொண்டிருக்கிறேன்.
நேபாளம் தனியாக இருக்காது. நான் இந்த மக்களுடன் இருக்கிறேன். நேபாள மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் அவர்களது வீடுகளை கட்டவும் மீண்டும் குடும்பங்கள் வாழவும் நான் எல்லாவற்றையும் செய்வேன் என்றார்.
பொதுவாகவே சோனு சூட் மக்களுக்கு அதிகமான நிதியுதவிகளை வழங்குவார். இந்த நேபாள மக்களுக்கான உதவிகளுக்கு இந்திய மக்கள் மட்டுமின்றி நேபாள மக்களும் அதிகமான வரவேற்பை அளித்து வருகிறார்கள்.
Summary
Standing here at the Trishuli River, nepal is not alone says Actor sonu sood
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







