
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம்!
நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து...

துருவ் விக்ரமின் புதிய பட அறிவிப்பு போஸ்டர் - படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்
பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.
பிரம்மன், ஆதித்யா வரமா படங்களில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் கருப்பு படத்துக்கு கதை எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் துருவ் நடிக்கும் படம் பல வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது.
பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் எந்தப் படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி தமிழிலும் தற்போது படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தமிழில் 4ஆவதாக உருவாகிவருகிறது.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (செப்.13) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் - அடிதடி தொடர்பான படமாக இருக்குமென இந்தப் போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.
#MythriTamil04 ð«°
— Mythri Movie Makers (@MythriOfficial) September 11, 2026
Mythri X Dhruv ð¯ð¥
First look out on September 13th â¤âð¥
Directed by @karanAkumar12
A @Music_Santhosh musical ð¼
Produced by @MythriOfficial@WriterSaby @viki_dop @chiya_1009 @PraveenRaja_Off #GMSekhar @vm_mor pic.twitter.com/gzilgWNzfy
Summary
Dhruv Vikram's new film to be produced by Mythri Movie Makers!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






