அந்தோ பரிதாபம்! பாலத்தின் இடுக்கில் ஒரு சிறுவன் உடலெல்லாம் ரத்த காயத்துடன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அழுக்கான உடல், உபயோகமில்லாத உடைகள், மெலிந்த தேகம் தலை முதல் கால் வரை சிராய்ப்புகளும், ஆறியும் ஆறாத பழைய, புதிய காயங்களுமாக மிகப் பரிதாபகரமான தோற்றத்தில் அவனிருந்தான். பார்ப்பதற்கு தமிழ் பையனைப் போலத் தெரியவில்லை. சுமாராக 13 வயதிருக்கும். முகம் சைனா சைசில் இருக்கிறது. இந்த அருகில் மருத்துவமனை உள்ளது. சரி எப்படியும் இருக்கவே இருக்கிறது 108. அவர் செல்போனில் 108 டயல் செய்தார். சில மணி நேரத்தில் உணர்வற்ற அந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு நர்சிடம் ‘கவனிச்சுக்கம்மா எனக்கு காலைல டியூட்டி இருக்கு. எதுக்கும் என் செல் நம்பரை நோட் பண்ணிக்கோ காலைல பார்க்கலாம். யார் பெத்த பிள்ளையோ பாவம்’ என கூறிவிட்டு கிளம்பினார். மருத்துவமனையில் சிகிச்சையை ஆரம்பித்தார்கள். மேலோட்டமான காயங்கள் தான், ஆனால் ரணமான காயங்கள். யார் இந்த குழந்தை? எப்படி கிராமத்திற்கு வந்தது? ஏதாவது பிரச்சினையாகி விடுமோ? எதற்கும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிடலாம் என்றார் டாக்டர்.