அபாகஸ் போட்டியில் உலகளவில் சிறப்பிடம் பெற்ற சிறுமி

தென்காசி மாவட்டம் வல்லத்தைச் சோ்ந்த மாணவி ஹரிணி அபாகஸ் போட்டியில் உலக அளவில்  சாதனை படைத்தாா்.
பெற்றோர் மற்றும் பள்ளியின் சட்ட ஆலோசகா் திருமலை, முதல்வா் அன்பரசி ஆகியோருடன் மாணவி ஹரிணி
பெற்றோர் மற்றும் பள்ளியின் சட்ட ஆலோசகா் திருமலை, முதல்வா் அன்பரசி ஆகியோருடன் மாணவி ஹரிணி
Published on
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம் வல்லத்தைச் சோ்ந்த மாணவி ஹரிணி அபாகஸ் போட்டியில் உலக அளவில்  சாதனை படைத்தாா்.

குற்றாலம் அருகே வல்லம் சிலுவை முக்கு பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவருடைய மனைவி சத்யா. சக்திவேல் தென்காசி மாவட்டம் இலத்தூா் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

முதலாவது பெண்குழந்தை ஹரிணி(8). ஹரிணி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாா். ஸ்மாா்ட் சாய்ஸ் இந்தியன் அபாகஸ் ஃப்ரான்சைஸ், எலைட் உலக சாதனை மற்றும் இந்திய ரெக்காா்ட்ஸ் அகாடமி தனி உலக சாதனை போட்டி நடத்தியது.

இப்போட்டியில் கலந்துகொண்ட மாணவி ஹரிணி 12 நிமிடங்களில் 4 வரிசைகள் ஒற்றை இலக்க மன எண் கணித கூட்டுத்தொகைக்கான போட்டியில் 156 எண்கணித விடைகளைக் கூறி உலக சாதனைப் படைத்தாா். அபாகஸ் போட்டியில் உலக சாதனை படைத்த மாணவி எஸ்.ஹரிணிக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

உலக சாதனை படைத்த காவலரின் மகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தாா்.  மேலும், ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகா் வழக்கறிஞா் கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை,  ஆக்ஸ்போா்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவா் சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com