மாற்றுத்திறன் கிரிக்கெட் வீர்களுக்கும் அரசு வேலையும், ஊதியமும் வழங்க வேண்டும். திருப்பூர் நல்லூரில் உள்ள வேஸ்ட் குடோனில் சூப்பர்வைசராகப் மாதம் ரூ. 15 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வருகிறேன். தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடிய நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தற்போது வரையில் எந்த சலுகையும் எங்களைப் போல எந்த ஒரு வீரருக்கும் கிடைக்கவில்லை. அதே வேளையில், வெளிநாட்டு தொடர்களுக்குச் செல்லும்போது அரசு சார்பில் டிக்கெட் செலவு, பயணப்படி ஆகிய உதவிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தமிழக மாற்றுத் திறனாளிகள் அணியில் விளையாடும் வீர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவதுடன் இல்லாமல் வேலைகளுக்குச் சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறோம். இதில், உதாரணமாக நான் வேலைக்குச் சென்றால் மட்டுமே என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். நான் பணியாற்றும் குடோன் உரிமையாளர் முகமது இஸ்மாயில் இரு வாரங்கள் கிரிக்கெட் விளையாடச் செல்வதற்காக விடுமுறை கேட்டாலும் கொடுத்து விடுகிறார். தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காவும் விளையாடும் எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை, ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கினால் எங்களால் நாட்டுக்காக மேலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சாகுல்ஹமீது.