இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் இருந்து வரும் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர்,
டிக்கெட் விற்பனையாளர், காவலர், தூய்மை பணியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 66
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: தட்டச்சர் - 02
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: டிக்கெட் விற்பனையாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: காவலர்
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
பணி: தூர்வை
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
பணி: தூய்மை பணியாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை
வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி, 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது rameswaramramanathar.hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேசுவரம்- 623 526, ராமநாதபுரம் மாவட்டம்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2022
இதற்கு விண்ணப்பிக்கலாம் |