மத்திய அரசின் ரசாயன நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ரசாயன நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 111

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: டெக்னீசியன் (மெக்கானிக்கல்) - 51
பணி: டெக்னீசியன் (எலக்ட்ரிக்கல்) - 32
பணி: டெக்னீசியன் (இன்ஸ்ட்ரூமென்டேசன்) - 28

தகுதி: பொறியியல் துறையில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து, இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.03.2022 தேதியின்படி,  31 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.700. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2022 

மேலும் விவரங்கள் அறிய https://www.rcfltd.com/files/Detailed_Advt%20-%20Technician%2015_03_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com