கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ.2,09,200 சம்பளத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

News image
Updated On :19 டிசம்பர் 2022, 8:59 am

DIN


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.37/2022  விளம்பர எண்.643

பதவி: மாவட்ட கல்வி அலுவலர்

காலியிடங்கள்: 11

சம்பளம்: 56,900 - 2,09,200

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி கணக்கிடப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.டி. அல்லது பி.எட் முடித்திருக்க வேண்டும். இடைநிலைக்கல்வி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது இணையான கல்வித் தகுதி இவைகளில் ஏதாவதொன்றில் தமிழை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கட்டணம் விவரம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதனிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டண விலக்கு குறித்த தகவலை அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: மூன்று நிலைகளை கொண்டது. அதவாது முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு பெற்ற மதிப்பெண்கள் இறுதித் தகுதியை முடிவு செய்வதற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 9.4.2023

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.