கிருமிகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உன்னதமான கஞ்சி
முருங்கையிலை கண்டந்திப்பிலிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
பச்சரிசி நொய் - 150 கிராம்
முருங்கையிலை - ஒரு கைப்பிடி
வாய்விடங்கம் - 10 கிராம்
கண்டந்திப்பிலி - 10 கிராம்
மிளகு - 10
இந்துப்பு - தேவையான அளவு
மோர் - 200 மி.லி
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
- அதில் வாய்விடங்கம், கண்டந்திப்பிலி, மிளகு மற்றும் முருங்கையிலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- நீரை கொதிக்க வைத்து 400 மி.லி அளவாக சுண்ட வைக்கவும்.
- பின்பு சுண்ட வைத்த நீரில் பச்சரிசி நொய்யை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- கொதித்த கஞ்சியில் தேவையான அளவு இந்துப்பு சேர்த்து கஞ்சியாக்கி கொள்ளவும்.
- இறுதியில் கஞ்சியுடன் மோர் சேர்த்து நன்றாக கலக்கி இறக்கி வைக்கவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கிருமிகளை நீக்கி நோய் எதிர்ப்பு ஆற்றைலை அதிகரிக்க செய்யும் அற்புதமான கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

