ஆன்லைன் கொள்முதல் முறையில் பிரச்சினை: சந்தை அலுவலகத்தை தாக்கிய விவசாயிகள்!
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் கொள்முதல் முறையில் தாங்கள் ஏமாற்றப்படுவதாக புகார் தெரிவித்த விவசாயிகள், சந்தை மையத்தில் உள்ள அலுவலகத்தை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.


ஹைதராபாத்: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் கொள்முதல் முறையில் தாங்கள் ஏமாற்றப்படுவதாக புகார் தெரிவித்த விவசாயிகள், சந்தை மையத்தில் உள்ள அலுவலகத்தை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத்தின் மலக்பேட் பகுதியில் பிரபலமான மிளகாய் மற்றும் வெங்காய சந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் இங்கு ஆன்லைன் கொள்முதல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறையின் மூலமாக தாங்கள் ஏமாற்றபப்டுவதகவும், தங்களுடைய விலை பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதைல்லை என்றும் விவசாயிகள் புகார் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், சந்தை வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்த சாமான்களை உடைத்ததால், பதற்றம் உண்டானது.
ஆனால் விவசாயிகளின் இந்த புகாரை அதிகாரிகள் மறுத்தனர். ஆன்லைன் கொள்முதல் நடைமுறை வெளிப்படையாக நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...