இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை? 

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2019, 12:22 pm

DIN

ஜெய்ப்பூர் புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.

வியாழனன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுநாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

அதேசமயம் இதன் காரணமாக மக்களிடையே பாகிஸ்தான் மீதான கோபமும், எதிர்ப்புணர்வும் அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கொடியை சிலர் தீயிட்டு கொளுத்தினர்.

அத்துடன் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மும்பையில் உள்ள  இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானின் புகைப்படத்தின் மேல் காகிதம் ஒட்டி, அவரது படம் மறைக்கப்பட்டது. அதேபோல பல மாநில கிரிக்கெட் சங்கங்களின் அலுவலகம் மற்றும் மைதானங்களில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் படங்கள் அகற்றப்பட்டன 

இந்நிலையில் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது மோதலாக முற்றிய நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.