இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு: நிதின் கட்கரி தகவல் 

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத்  தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்தார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2019, 3:18 pm

DIN

புது தில்லி: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத்  தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இந்தஸ் நீர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் உற்பத்தியாகும் சீலம், செனாப் மற்றும் இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்படி இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் இந்துஸ் நதியின் 80 சதவீத நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானால் நடைபெற்ற உரி ராணுவ முகாம் தாக்குதலின் போதே இந்த நதிகளில் இருந்து நீர் பாகிஸ்தானுக்கு செல்வதை தடை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

தற்போது நடைபெற்றுள்ள புல்வாமா தாக்குதலைக்குப் பிறகு இரு நாடுகளிடையேயான உறவு மேலும் சீர்கேட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத்  தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவ கூறியதாவது:

இந்தியாவிலிருந்து இதுவரை மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டப்பட உள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து அதை யமுனை ஆற்றில் இணைப்பதன் காரணமாக யமுனை ஆற்றின் நீர்வளம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.