அலிகார்: மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்துக் கொண்டாடிய பெண் சாமியார் காவல்துறைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் புதனன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் அமைந்துள்ள ஹிந்து மகா சபா அலுவலகத்தில் காந்தியின் உருவம் கொண்ட கொடும்பாவி பொம்மை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பொம்மையின் மார்பு பகுதியில் சிவப்பு திரவம் பொருத்தப்பட்டிருந்தது.
பின்னர் ஹிந்து மஹா சபாவின் தலைவர்களில் ஒருவரான பெண் சாமியார் பூஜா ஷகுன் பாண்டே அந்தபொம்மையைத் துப்பாக்கியால் சுட்டார். உடனே அதில் பொருத்தப்பட்டிருந்த சிவப்பு திரவம் ரத்தம் போல் வழிந்து ஓடியது. சுடும்போது அங்கு கூடி இருந்தவர்கள் 'நாதுராம் கோட்சே வாழ்க' என்று இந்தியில் முழக்கமிட்டனர். அதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் உருவ பொம்மை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள். அத்துடன் கோட்சே உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். பெண் சாமியார் பாண்டே கூடியிருந்தோருக்கு இனிப்புகளையும் வழங்கியுள்ளார் மொத்த நிகழ்வையும் அவர்கள் விடியோவாக எடுத்து வெளியிட்டனர்.
இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியவுடன் கடும் கண்டங்கள் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தற்போது இவ்விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் சாமியார் பூஜா ஷகுன் பாண்டே தலைமறைவாகி விட்டார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



