/

அருண் ஜேட்லி நினைவுநாளில் அவரை நினைவு கூரும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் நினைவு நாளில் அன்னாரை நினைவு கூந்துள்ளார்.

News image
அருண் ஜேட்லி நினைவுநாளில் அவரை நினைவு கூரும் பிரதமர்
Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:16 am

DIN


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் நினைவு நாளில் அன்னாரை நினைவு கூந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள சுட்டுரைப் பதிவில், “நாம், கடந்த ஆண்டு இதே நாளில்தான் அருண் ஜேட்லி்யை இழந்தோம். நான் எனது நண்பரை இழந்து தவிக்கிறேன்.

அருண் ஜேட்லி, இந்தியாவுக்காக அயராது உழைத்தவர். அவரது நகைச்சுவை உணர்வு, அறிவுக் கூர்மை, சட்ட அறிவு, அன்பான ஆளுமை அனைத்தும் மாறாப் புகழ் பெற்றவை” என்று பிரதமர் கூறியுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.