இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லி நோக்கிய பயணத்தை யாராலும் தடுக்க இயலாது: பூபிந்தர் சிங்

விவசாயிகளுக்கு ஹரியாணா அரசு மிகப்பெரிய தவறை செய்துள்ளதாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

News image
ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா (கோப்புப்படம்)
Updated On :4 டிசம்பர் 2020, 11:38 am

DIN


விவசாயிகளுக்கு ஹரியாணா அரசு மிகப்பெரிய தவறை செய்துள்ளதாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

ஹரியாணா அரசு விவசாயிகளைத் தடுத்திருக்கக் கூடாது, தண்ணீரைப் பீய்ச்சியடித்திருக்கக் கூடாது, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியிருக்கக் கூடாது என்று கூறினார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பேசிய ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்,  ''விவசாயிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாற்று மதத்தவர்கள் என்பதால் குடியேறிகள் என்று விமர்சிக்கப்படுகின்றனர். விவசாயிகள் விவசாயிகளே. சாதி, மதங்களைக் கடந்த உன்னதமான கோரிக்கைக்காக அவர்கள் தில்லியில் ஒன்றுகூடியுள்ளனர்.

தண்ணீரைப் பீய்ச்சியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தி ஹரியாணா அரசு மிகப்பெரிய தவறிழைத்துள்ளது. விவசாயிகளின் தில்லி நோக்கிய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.