இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாடு தழுவிய முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: சிவசேனை

விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2020, 11:29 am

DIN


விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

"இந்த முழு அடைப்புக்கு சிவசேனை ஆதரவளிக்கிறது. மக்கள் தாமாக முன்வந்து முழு அடைப்பில் பங்கெடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான உண்மையான ஆதரவை அது வெளிப்படுத்தும். இது அரசியல் சார்ந்த முழு அடைப்பல்ல. இருப்பினும், பல்வேறு அரசியல் கட்சிகள் இதில் பங்கெடுக்க முடிவெடுத்துள்ளன.

இது விவசாயிகளின் குரல்களைப் பலப்படுத்துவதற்கான முழு அடைப்பு.  

குளிரையும் அரசின் ஒடுக்குமுறையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து 12 நாள்களாக தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை."

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 12 நாள்களாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.