பேச்சுவார்த்தையில் அமித் ஷா தலையீடு: விவசாயிகளுடன் இன்று திடீர் சந்திப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்கின்றனர்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நாளை (புதன்கிழமை) 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் விவசாயிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. நாடு தழுவிய முழு அடைப்பும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து, இருதரப்புக்கு இடையிலான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விவசாயிகள் தரப்பில் இன்று அமித் ஷாவைச் சந்திக்கவுள்ளதாக விவசாயத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாரதிய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் இதுபற்றி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"இன்று இரவு 7 மணிக்கு உள்துறை அமைச்சருடன் சந்திப்பு இருக்கிறது. நாங்கள் தற்போது சிங்கு எல்லைக்குப் புறப்படுகிறோம். அங்கிருந்து புறப்பட்டு உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறோம்" என்றார்.
முன்னதாக, போராட்டத்தின் தொடக்கத்தில் அமித் ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து நிபந்தனை விதித்தார். அதை ஏற்க மறுத்த விவசாயிகள், வேளாண் துறை, உள்துறை அமைச்சரின் வரம்புக்குள்பட்டதல்ல என்று கூறி அவரது அழைப்பை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...