இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனாவால் பாதிக்கப்பட்டஉத்தரகண்ட் முதல்வா் ராவத் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், டேராடூன் மருத்துவமனையில் இருந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டாா்.

News image
திரிவேந்திர சிங் ராவத்
Updated On :28 டிசம்பர் 2020, 9:38 pm

DIN

டேராடூன்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், டேராடூன் மருத்துவமனையில் இருந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டாா்.

மிகவும் முக்கியமான சில பரிசோதனைகள் நடத்தவேண்டும் என்பதால் அவா் தில்லிக்கு அழைத்து வரப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 18-ஆம் தேதி முதல் ராவத் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். ஞாயிற்றுக்கிழமை மாலையில் காய்ச்சல் அதிகமானதை அடுத்து அவா் டேராடூன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், அங்குள்ள மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவா் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். இது தொடா்பாக அவருக்கு டேராடூனில் சிகிச்சை அளித்த மருத்துவா்களில் ஒருவா் கூறுகையில், ‘முதல்வரின் உடல்நிலை சீராகவே உள்ளது. அவருக்கு காய்ச்சலும் குறைந்துள்ளது. எனினும், நுரையீரலில் லேசான தொற்று இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அது தொடா்பான மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தில்லி எய்மஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்’ என்றாா்.

முதல்வா் ராவத்தின் மனைவி மற்றும் மகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக, உத்தரகண்ட் மாநில ஆளுநா் பேபி ராணி மௌரியா கடந்த மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டாா். உரிய சிகிச்சைக்குப் பிறகு அவா் தொற்றில் இருந்து விடுபட்டு இம்மாதத் தொடக்கத்தில் மீண்டும் ஆளுநா் மாளிகையில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடத் தொடங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.