முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நினைவில் கொள்ளுங்கள்.. வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி
Updated On :28 அக்டோபர் 2020, 5:09 am

DIN


புது தில்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில், அனைவரும் பங்கேற்று ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது அன்பு வேண்டுகோள் என்னவென்றால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தேர்தலில் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இரண்டு அடி இடைவெளியைப் பின்பற்றுங்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருங்கள்.

நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களிக்க வேண்டும், பிறகுதான் பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.