சத்தீஸ்கரில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த விரும்பவில்லை என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தொற்றுக்கு எதிராக ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியையும், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. எனினும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பே அதனை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதித்தது விமா்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் சத்தீஸ்கரில் அந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த விரும்பவில்லை என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பாக அதனை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். அந்த தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள், அந்த முடிவுகள் குறித்த ஆய்வு நிறைவடைவதற்கு முன்பாக, அதனை பரந்த அளவில் பயன்படுத்துவதில் வேகம் காட்டக் கூடாது. இதை மற்ற நிறுவனங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கோரும் என்று தெரிவித்தாா்.
நாடு முழுவதும் வரும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், சத்தீஸ்கா் சுகாதாரத் துறை அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2,400 டாஸ்மாக் பாா் உரிம காலம் முடிவு: ஒப்பந்தம் புதுப்பிப்பு குறித்து இன்று மீண்டும் பேச்சுவாா்த்தை

கா்நாடகம், ஹிமாசலில் நிலச்சரிவு: 4 போ் உயிரிழப்பு - பல மாநிலங்களில் மழை-வெள்ளம்

தமிழக வனப்படைக்கு நவீன ஆயுதங்கள், ரோந்து வாகனங்கள்: அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வழங்கினாா்






