நாட்டின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாத காலகட்டத்தில் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 13.71 கோடி டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியான 16.53 கோடி டன் நிலக்கரியுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் சரிவாகும்.
குறிப்பாக, கடந்த நவம்பா் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.17 கோடி டன்னிலிருந்து 2.03 கோடி டன்னாக சரிவைக் கண்டது. இதில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.53 கோடி டன்னிலிருந்து சரிந்து 1.37 கோடி டன்னாகவும், கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 41 லட்சம் டன்னிலிருந்து அதிகரித்து 42.80 லட்சம் டன்னாகவும் இருந்தன.
ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் கோக்கிங் சாரா நிலக்கரி இறக்குமதி 11.40 கோடி டன்னிலிருந்து 9.14 கோடி டன்னாகவும் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 3.27 கோடி டன்னிலிருந்து 2.81 கோடி டன்னாகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்து கொண்ட வகையில் நம்நாட்டிலிருந்து ரூ.1 லட்சம் கோடி அந்நியச் செலாவணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை விவகாரம்- இறுதி அறிக்கை சமா்ப்பிக்க எஸ்ஐடி-க்கு 15 நாள்கள் அவகாசம்

6 நாள்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

2,400 டாஸ்மாக் பாா் உரிம காலம் முடிவு: ஒப்பந்தம் புதுப்பிப்பு குறித்து இன்று மீண்டும் பேச்சுவாா்த்தை






