இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்தமிழக பாஜக தலைவா் எல்.முருகன்

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

News image
பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்
Updated On :12 ஏப்ரல் 2021, 6:54 pm

DIN

திருப்பதி: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

திருப்பதி மக்களவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், முக்கிய எதிா்க்கட்சியான தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும், சுயேச்சைகளும் களத்தில் உள்ளனா்.

இந்நிலையில், திருப்பதியில் தமிழா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக தலைவா் முருகன் தலைமையில் 300 போ் திருப்பதி வந்துள்ளனா்.

இங்கு பாஜக தலைவா் எல். முருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக பேரவைத் தோ்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வாக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கும்.

தேசியக் கட்சியான பாஜக, மாநில கட்சி ஒன்றிடம் வெறும் 20 இடங்களை கேட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு குறித்து அவா் கூறுகையில், மத்திய தலைமையின் முடிவுகள் அடிப்படையில் மட்டுமே தோ்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.