திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆக்ஸிஜன் விரைவு ரயில் உத்தரப்பிரதேசத்தை அடைந்தது

திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட மூன்று டேங்கர்களை சுமந்து கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்த புறப்பட்ட ஆக்ஸிஜன் விரைவு ரயில் உத்தரப்பிரதேசத்தை வந்தடைந்தது.

News image

ஆக்ஸிஜன் விரைவு ரயில் உத்தரப்பிரதேசத்தை அடைந்தது

Updated On :24 ஏப்ரல் 2021, 9:05 am


லக்னௌ: திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட மூன்று டேங்கர்களை சுமந்து கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்த புறப்பட்ட ஆக்ஸிஜன் விரைவு ரயில் உத்தரப்பிரதேசத்தை வந்தடைந்தது.

கரோனா தொற்று அதிகரிப்பால், மருத்துவத்துக்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததால், மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் டேங்கர்களைக் கொண்டு செல்லும் பணியில் இந்திய ரயில்வே இறங்கியது.

இதையடுத்து, திரவ ஆக்ஸிஜன் நிரப்பிய டேங்கர்களை ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு மாநிலத்துக்குள் பல்வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் பணியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து மூன்று டேங்கர்களை ஏற்றிக் கொண்டு உத்தரப்பிரதேசம் வந்த ஆக்ஸிஜன் விரைவு ரயிலில் இருந்த இரண்டு டிரக்குகள் லக்னௌவுக்கும், ஒரு டிரக் வாராணசிக்கும் வழங்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.