நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன: பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் அவமதிப்பதாக பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன: பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன: பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் அவமதிப்பதாக பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரத்துறை பிரஹலத் ஜோஷி கூறியதாவது,

நாடாளுமன்றத்தில் அமைச்சரின் கையிலிருந்த காகிதை கிழிந்தெறிந்துவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருப்பது, உறுப்பினரை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பதாகும் என கூட்டத்தில் பிரதமர் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 10 நாள்களாக முழக்கங்கள் எழுப்பி கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com