‘இதுவரை 51.85 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
நாட்டில் இதுவரை 51.85 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
நாட்டில் இதுவரை 51.85 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 51.85 கோடிக்கும் அதிகமானோருக்கு (51,85,17,148) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.
இதையும் படிக்க | ‘இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் கடுதாசி’: கமல்ஹாசன் விமர்சனம்
இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 37 லட்சத்திற்கும் அதிகமான (37,76,765) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
18-44 வயது பிரிவில் இதுவரை 20,47,733 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 4,05,719 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.
இதையும் படிக்க | ஓபிசி இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.
நாட்டில் இதுவரை மொத்தம் 40,31,06,020 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 11,54,11,128 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 1,04,51,548 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 8,09,288 நபர்கள் இரண்டாம் தவணை இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...