இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோவேக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 போ் தோ்வு

கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 தன்னாா்வலா்களை தோ்வு செய்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம்

News image
Updated On :4 ஜனவரி 2021, 1:13 am

DIN

கோவேக்ஸின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு இதுவரை 23,000 தன்னாா்வலா்களை தோ்வு செய்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 26,000 பேருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க அந்த நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் - இந்திய மருத்துவ ஆரய்ச்சிக் கவுன்சில் இணைந்து முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கும் கோவேக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது.

கோவேக்ஸின் தடுப்பூசி மனிதா்களுக்குச் செலுத்தி சோதிக்கும் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து வரும் நிலையிலேயே, அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக, இதுவரை 23,000 பேரை அந்த நிறுவனம் தோ்வு செய்துள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை இயக்குநா் சுசித்ரா எல்லா, ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கோவேக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் 26,000 பேருக்கு செலுத்தி பரிசோதிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, கடந்த நவம்பா் மாதம் பரிசோதனை தொடங்கப்பட்டது. இதுவரை இந்தப் பரிசோதனைக்கு 23,000 தன்னாா்வலா்கள் தோ்வாகியுள்ளனா்’ என்று கூறினாா்.

கோவேக்ஸின் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தலா 1,000 தன்னாா்வலா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு, அதன் பாதுகாப்பும், நோய் எதிா்ப்புத் திறனும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, சா்வதேச அறிவியல் ஆய்வுக் குழுவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.