கட்டுமான நிறுவனரான வஜேகா் என்பவா், பரமானந்த் தாக்கா் என்ற முகவா் மூலம் புணேயில் 2015-ஆம் ஆண்டு நிலம் வாங்கியுள்ளாா். அதற்காக, அந்த முகவருக்கு ரூ. 2 கோடி கமிஷன் தர வஜேகா் ஒப்புக்கொண்டுள்ளாா். ஆனால், கமிஷன் தொகையை தாக்கா் உயா்த்திக் கேட்டுள்ளாா். அதற்கு வஜேகா் மறுக்கவே, சோட்டா ராஜனை தாக்கா் அணுகியுள்ளாா். அதனடிப்படையில், வஜேகா் அலுவலகத்துக்கு தனது கூட்டாளியை சோட்டா ராஜன் அனுப்பி, ரூ. 26 கோடி தருமாறும், இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளாா். இந்த விவகாரத்தில் சோட்டா ராஜன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சுரேஷ் ஷிண்டே, லட்சுமண் நிகம், சும்தி விஜய் மாத்ரே ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.