சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அடுத்த கர்நாடக முதல்வர் யார்? இன்று மாலைக்குள் விடை: எடியூரப்பா

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்விக்கு கட்சி தலைமை இன்று மாலைக்குள் பதில் அளிக்கும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜனவரி 2024, 9:15 am IST

கர்நாடகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கு கட்சித் தலைமை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் பதில் அளிக்கும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பின்பு, மதியம் இரண்டு மணிக்கு பெலகாவி நகருக்கு எடியூரப்பா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், அவர் பெங்களூருவுக்கு செல்கிறார்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"கட்சி மேலிடத்திலிருந்து இன்று மாலைக்குள் செய்தி வரும். உங்களுக்கும் அந்த செய்தி குறித்து தெரியவரும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக அறிவிக்கப்படுவாரா என்பதெல்லாம் கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய முடிவு. இதுகுறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைமைக்கே உள்ளது" என்றார்.

புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து சனிக்கிழமை வரை பாஜக மேலிடம் தெளிவான பதில் அளிக்கவில்லை.

எனினும், நான்காவது முறையாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ள நிலையில், அவரின் பதவி பறிக்கப்படும் என செய்திகள் வெளியாகின.

கட்சியில் ஒரு பிரிவு, இப்போதைக்கு மாநில தலைமையில் மாற்றம் இருக்காது என தெரிவித்தது. ஆனால், மற்றொரு பிரிவு இதுகுறித்து முடிவு இன்று வெளியாகும் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.