இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’: வன்முறையால் இறந்ததாக பதிவிட்ட பாஜகவிற்கு பத்திரிகையாளர் பதில்

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலியானதாக பத்திரிகையாளரின் படத்தைப் பகிர்ந்த பாஜகவிற்கு அந்த பத்திரிகையாளர் பதிலளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

News image
‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’: வன்முறையால் இறந்ததாக பதிவிட்ட பாஜகவிற்கு பத்திரிகையாளர் பதில்
Updated On :6 மே 2021, 1:44 pm

DIN

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலியானதாக பத்திரிகையாளரின் படத்தைப் பகிர்ந்த பாஜகவிற்கு அந்த பத்திரிகையாளர் பதிலளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் கட்சி பெருவாரியான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மீது திரிணமூல் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக தலைவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் திரிணமூல் கட்சியினர் நடத்திய தாக்குதலில் பலியானவர் என ஒருவரின் படத்தை பாஜக தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. 

பாஜக பகிர்ந்த படத்தில் இருந்தவர் அப்ரோ பானர்ஜி தனியார் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வருபவர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர்,  “நான் அப்ரோ பானர்ஜி, சிதல்குச்சியிலிருந்து 1,300 கி.மீ தூரத்தில் வசித்து வருகிறேன். ஆனால் பாஜக இணைய பிரிவினர் எனது பெயர் மானிக் மொய்த்ரா என்றும் நான் சிதல்குச்சியில் இறந்துவிட்டேன் எனவும் பரப்பி வருகின்றனர். தயவுசெய்து இந்த போலி செய்திகளை நம்ப வேண்டாம். நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

போலியாக செய்தி பகிர்ந்ததாக இணையவாசிகள் பாஜகவினரை விமர்சித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.