மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தில்லியின் எல்லை பகுதிகளில் போராடிவரும் விவசாயிகள், நாடாளுமன்றத்தில் சட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரையில் போராட்ட களத்தை விட்டு செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2021, 8:06 am

DIN

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த வாரம், மிகப் பெரிய திருப்பமாக, மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். அதுமட்டுமின்றி, தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

அப்போது, "இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் நாடாளுமன்ற கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும்" என்றார்.

சட்டத்தை ஆதரித்து பேசிய அவர், "சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கான சீர்திருத்தும் இது. விவசாயிகளுக்காகவே இதை சட்டத்தை நிறைவேற்றினேன். தற்போது, அவர்களுக்காகவே இதை திரும்ப பெறுகிறேன்" என்றார்.

தில்லியின் எல்லை பகுதிகளில், கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடிவருகின்றனர். விவசாயிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், "நவம்பர் 29ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்த சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் காத்து கொண்டிருப்பார்கள்" என்றார்.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "கடந்த காலத்தில், இம்மாதிரியான பொய் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்ற பிரதமரின் வார்த்தைகளை நம்ப தயாராக இல்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.