கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அக்டோபர் இறுதியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்?

அக்டோபர் இறுதியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :6 அக்டோபர் 2021, 2:35 pm

DIN


அக்டோபர் இறுதியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியது:

"காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சோனியா காந்தி ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டார். கூட்டத்தில் உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேசப்படும் என அறிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் கூட்டம் கூட்டப்படலாம்."

பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட ஜி23 தலைவர்கள் குரல் எழுப்பினர். இதுபற்றி சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் கடிதமும் எழுதினார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.