அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image
மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
Updated On :29 அக்டோபர் 2021, 7:02 am

DIN

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேற்று முந்தினம்  (அக்-27) அபுதாபிலிருந்து  எத்தியாட் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணியைப் பரிசோதனை செய்தபோது 2 கிலோ தங்கத்தை பாதுகாப்பு கோட்டில்  மறைத்து  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமான ஊழியர் ஒருவரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.90 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த அக்-26 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.45 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.