27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வெள்ள பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு: குழு அமைக்கும் மகாராஷ்டிரம்

மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். 

News image

முதல்வர் உத்தவ் தாக்கரே (கோப்புப் படம்)

Updated On :2 ஆகஸ்ட் 2021, 4:48 pm IST

மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். 

வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளைக் கண்காணித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் குழு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பில்வாடி, அன்கால்க்கோப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்னர் முதல்வர் தாக்கரே பேசியதாவது, ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்புப் பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வையும் எடுக்க வேண்டும்.

அதற்காக குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து நிரந்தர தீர்வு காணப்படும்.

நீர்நிலை வழிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்படும். மேலும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளிலுள்ள நீரை மழை பெய்யாத வறண்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்வது குறித்தும் பலர் பரிந்துரை வழங்கி வருகின்றனர். 

இது குறித்து பரிசீலனை செய்து, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.