அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

News image
Updated On :8 அக்டோபர் 2021, 1:06 pm

DIN

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் காவலுக்கு பிறகு ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்டோரின் 3 நாள் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதனிடையே ஆர்யன் கான் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக்கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.