இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புத்தடியில் 30 நாள்களுக்குப் பிறகு ஏலக்காய் ஏலம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புத்தடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியம் பூங்காவில் 30 நாள்களுக்குப் பிறகு சிறப்பு மின்னணு ஏலக்காய் ஏலம்  ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
புத்தடியில் 30 நாள்களுக்குப் பிறகு நடைபெற்ற ஏலக்காய் ஏலம்.
Updated On :26 செப்டம்பர் 2021, 11:43 am

DIN

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புத்தடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியம் பூங்காவில் 30 நாள்களுக்குப் பிறகு சிறப்பு மின்னணு ஏலக்காய் ஏலம்  ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை 75 வாரங்களாக ஆஜாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் ஒவ்வொரு துறை சார்பில் கொண்டாடி வருகிறது. இதனையொட்டி இந்திய நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டம் புத்தடியில் 30 நாள்களுக்குப் பிறகு மின்னணு ஏலக்காய் ஏலத்தை  நறுமணப் பொருள் வாரிய தலைவர் ஏ.ஜி.தங்கப்பன் தொடங்கி வைத்தார். 

வாரிய உறுப்பினர்கள் ஸ்டெனி போத்தன்,  டி.டி.ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வண்டன்மேட்டை சேர்ந்த ஹீடர் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் சிறப்பு மின்னணு ஏலக்காய் வர்த்தகத்தை நடத்தி அதில் 75 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனையானது. அதிகபட்ச விலையாக ஏலக்காய் கிலோவிற்கு 2,413 ரூபாய்க்கும், சராசரி விலையாக கிலோவிற்கு 1,128 ரூபாய்க்கு ஏலம் போனது. 

ஏலக்காய் ஏலத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். நிர்வாகி ரோஜன் சேவியர் நன்றி கூறினார். கரோனா தொற்று  காரணமாக, புத்தியில் நிறுத்திவைக்கப்பட்ட ஏலக்காய் ஏலம் 30 நாள்களுக்குப் பிறகு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.