புடவை அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

தில்லியில் புடவை அணிந்து நட்சத்திர விடுதிக்கு வந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த உணவு விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புடவை அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்
புடவை அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்
Published on
Updated on
1 min read

தில்லியில் புடவை அணிந்து நட்சத்திர விடுதிக்கு வந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த உணவு விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தில்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்று புடவை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்துள்ளது விவாதப் பொருளானது. சமூக வலைத்தளத்தில் பரவிய விடியோவில் மேற்கத்திய ஆடைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும், புடவைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் நட்சத்திர விடுதி ஊழியர்கள் தெரிவித்த காட்சிகள் பலத்த கண்டனங்களை எதிர்கொண்டது.

எனினும் புடவை அணிந்து வந்த பெண் விடுதி ஊழியரை தாக்கியதாலேயே அனுமதி மறுத்ததாக உணவு விடுதி நிர்வாகம் தெரிவித்த நிலையில் முறையாக உரிமம் பெறாமலும், சுகாதாரமற்ற முறையிலும் இயங்கியதாகக் கூறி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவு விடுதிக்கு சீல் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com