திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பொட்டுக்காக சிறுமியை அடித்த ஆசிரியர்: தந்தையின் புகாரால் பணியிடை நீக்கம்

ஜம்மு - காஷ்மீரிலுள்ள ரஜெளரி பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பொட்டு வைத்து வந்ததற்காக மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. 

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 6:59 pm IST

ஜம்மு - காஷ்மீரிலுள்ள ரஜெளரி பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பொட்டு வைத்து வந்ததற்காக மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. 
இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் பெயரில், ஆசிரியரைப் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி பகுதியில் நிசார் அகமது என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் நெற்றியில் பொட்டு வைத்து வந்ததற்காக ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக மாணவியின் தந்தை தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பொட்டுவைத்து வந்ததற்காக தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாக காவல் துறையினர் புகார் பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடர்ந்தால், வன்முறையில் முடியும் என்றும் மாணவியின் தந்தை எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.