ஸ்ரீநகரில் மர்ம முறையில் குண்டு வெடிப்பு

ஸ்ரீநகரில் மர்ம முறையில் குண்டு வெடிப்பு

ஸ்ரீநகர் துலிப் கார்டன் அருகே வேன் ஒன்றில், திடீரென குண்டு வெடித்ததில், வேன் ஓட்டுநர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
Published on

ஸ்ரீநகர் துலிப் கார்டன் அருகே வேன் ஒன்றில், திடீரென குண்டு வெடித்ததில், வேன் ஓட்டுநர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுவது, 

ஜம்மு மாவட்டத்தின் பதிவு எண்ணைக் கொண்ட வேனின் ஓட்டுநர் ஒருவர் பார்க்கிங் பகுதிக்கு அருகே வாகனத்தின் பின்புறக் கதவைத் திறந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பில் ஓட்டுநர் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில்,  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குண்டு வெடிப்புக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com