கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

லக்கீம்பூர் வன்முறை: ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில், மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

News image

லக்கீம்பூா் கெரி குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா (கோப்புப்படம்)

Updated On :18 ஏப்ரல் 2022, 5:26 am

DIN

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில், மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியின்போது, அங்கு வந்த பாஜகவினரின் காா்களில் ஒன்று, விவசாயிகள் மீது மோதி ஏற்பட்ட வன்முறையில், விவசாயிகள் நால்வா் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

அதைத் தொடா்ந்து, ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ல் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள், வழக்கறிஞர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு விசாரித்து வந்தது. 

கடந்த 4 ஆம் தேதியுடன் விசாரணை முடிவடைந்த நிலையில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும் ஒரு வாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.