கலாசாரத்தைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது.
ஜல்லிக்கட்டு வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், நாட்டு மாடு, காளை இனத்தை பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக விதிமுறைகள் கடைபிடித்தே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் விவகாரத்தில் அரசியல் சாசன அமா்வு முன் இன்று தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இந்த விவகாரத்தை கடந்த சில தினங்களாக விசாரித்து வருகிறது.