இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாகனமோ, தொலைபேசியோ இல்லாத காவல்நிலையங்களா? அதுவும் இத்தனையா?

நகரங்களில், வீட்டுக்கு 2 வண்டி, 4 செல்லிடப்பேசி இருக்கும் நிலையில், நாட்டில் வாகன வசதி, தொலைபேசி வசதியோ இல்லாத காவல்நிலையங்கள் இன்னமும் நூற்றுக்கணக்கில் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 12:21 pm

DIN

நகரங்களில், வீட்டுக்கு 2 வண்டி, 4 செல்லிடப்பேசி இருக்கும் நிலையில், நாட்டில் வாகன வசதி, தொலைபேசி வசதியோ இல்லாத காவல்நிலையங்கள் இன்னமும் நூற்றுக்கணக்கில் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு -  காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகள் எத்தனை பதற்றமானவை என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், அந்த மாநிலங்களில் சுமார் 148 காவல்நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை என்பதும், அதிலும் 53 காவல்நிலையங்களில் கைப்பேசிகளோ, செல்லிடப்பேசி வசதியோ இல்லை. நக்ஸல் அதிகம் அதிகம் உள்ள ஆந்திரத்தில மட்டும் 135 காவல்நிலையங்களில் வாகன வசதியே கிடையாது.

நாடு முழுவதும், சரியாக 257 காவல்நிலையங்களில் வாகன வசதி கிடையாது, அதுபோல, 638 காவல்நிலையங்களில் தொலைபேசி வசதியோ, 143 காவல்நிலையங்களில் கைப்பேசி வசதியோ செல்லிடப்பேசி வசதியோ இல்லை என்கிறது 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியின் புள்ளிவிவரம்.

அதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த காவல்நிலையங்கள் அமைந்திருக்கும் பெரும்பாலான மாநிலங்கள், 2018 - 19ஆம் ஆண்டில், காவல்துறை நவீனமயமாக்கியதற்காக மத்திய அரசின் விருதுகளை வாங்கிக் குவித்திருப்பதாக மத்திய உள்விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடயாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த் ஷர்மா, உடனடியாக காவல்நிலையங்களில், தொலைபேசி வசதியும் வாகன வசதியும் செய்து கொடுக்குமாறு மத்திய உள்விவகாரத் துறையை வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.