மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டில் புதிதாக 1,79,723 பேருக்கு தொற்று: 146 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :10 ஜனவரி 2022, 5:28 am

DIN


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,79,723. இது கடந்த 227 நாள்களில் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த ஆண்டு மே 27 ஆம் தேதி புதிய மொத்த பாதிப்பு 1,86,364 ஆக பதிவானது. 

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,57,07,727 கோடியாக உயர்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 46,569 
இதுவரை குணமடைந்தோர்: 3,45,00,172.​​​​​​​

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 96.62​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 146. உயிரிழந்தோர் விகிதம் 1.36 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,69,724.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,23,619 ஆக அதிகரித்துள்ளது, இது சுமார் 204 நாள்களில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். மொத்த உயிரிழப்பு 4,83,936 ஆக உயர்ந்துள்ளது,சிகிச்சை பெறுவோரின் விகிதம் 2.03 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,45,00,172 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வழக்கு இறப்பு விகிதம் 1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 13% ஆக உள்ளது. 

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

கரோனா தடுப்பூசி:   நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,51,94,05,951 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 29,60,975 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 69,15,75,352 பரிசோதனைகளும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,52,717 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.