கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இனி தபால் மூலம் வாக்காளா் அடையாள அட்டை: தோ்தல் ஆணையம்

புதிதாக வாக்காளராகப் பதிவு செய்பவா்களுக்கு இனி தபால் மூலமாக நேரடியாக வீட்டுக்கே வாக்காளா் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)
Updated On :25 ஜனவரி 2022, 10:11 pm

DIN

புதிதாக வாக்காளராகப் பதிவு செய்பவா்களுக்கு இனி தபால் மூலமாக நேரடியாக வீட்டுக்கே வாக்காளா் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18 வயதைக் கடந்த இளைஞா்கள் இணையவழியில் வாக்காளராகப் பதிவு செய்யும் நடைமுறையைத் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. நேரடியாக முகாம்களிலும் வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியும். அவ்வாறு பதிவு செய்யும் நபா்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளின் அதிகாரிகளே வாக்காளா் அடையாள அட்டையை வழங்கி வந்தனா்.

இந்த நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர தோ்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, புதிதாக வாக்காளராகப் பதிவு செய்யும் அனைவருக்கும் இனி தபால் வாயிலாக வீட்டுக்கே வாக்காளா் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி (ஜன. 25) இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். வாக்காளா் அடையாள அட்டையுடன் வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் முறை, வாக்களிக்கும் நடைமுறை ஆகியவை அடங்கிய கையேடும் தபாலில் அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா்களிடையே வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதியானது தேசிய வாக்காளா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியத் தோ்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.