கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நான்குனேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

நான்குனேரி கொலைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
பெரும்பத்து பேருந்து நிறுத்தம்.- படம்: DNS
Updated On :3 மார்ச் 2026, 7:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

நான்குனேரி கொலைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே சாலையில் நடந்து சென்றவர்களை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் வடமாநில தொழிலாளி உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

நான்குனேரி காவல் சரகம், பெரும்பத்து கடைத்தெரு பகுதிக்கு திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் பைக்குகளில் கும்பலாக வந்த 9 பேர், அரிவாளால் அங்கு நின்ற பொதுமக்களையும், தப்பி ஓட முயன்றவர்களையும் சரமாரியாக வெட்டினராம்.

அப்போது, 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், பெரும்பத்து இந்திரா காலனியை சோ்ந்த ஜான்(42) என்பவரும், வடமாநில தொழிலாளி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து புளியங்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு நின்றிருந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமாா்(45) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் நெல்சன், கணேசன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நெல்லையில் முகாமிட்டு, டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.