கேரளத்தில் 54 ஆயிரத்தைக் கடந்தது ஒருநாள் கரோனா பாதிப்பு

கேரளத்தில் ஒரேநாளில் 54,537 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கேரளத்தில் 54 ஆயிரத்தைக் கடந்தது ஒருநாள் கரோனா பாதிப்பு
கேரளத்தில் 54 ஆயிரத்தைக் கடந்தது ஒருநாள் கரோனா பாதிப்பு

கேரளத்தில் ஒரேநாளில் 54,537 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,537 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 30,225 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  அதேசமயம் கரோனாவுக்கு இன்று 13 பேர் பலியாகியுள்ளனர். 

இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 52,786 ஆக உயர்ந்துள்ளது. 3,33,447 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com