கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முறைகேடான வா்த்தக செயல்பாடுகள்: கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை

 முறைகேடான வா்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வி சாா்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2022, 10:19 pm

DIN

 முறைகேடான வா்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வி சாா்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலாளா் ரோஹித் குமாா் சிங், தில்லியில் இந்திய இணையதள மற்றும் செல்போன் சங்கத்தின் கீழ் இயங்கும் சுய ஒழுங்குமுறை அமைப்பான ‘இந்தியா எட்-டெக் கூட்டமைப்பு’ (ஐஇசி) உடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது கல்வி சாா்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறைகள், முறைகேடான வா்த்தக செயல்பாடுகளை தடுக்காவிட்டால், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த ஏதுவாக அரசே கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கும் என்று சிங் எச்சரித்தாா்.

இந்த கூட்டத்தில் ஐஇசி உறுப்பினா்களான பைஜூஸ், வேதாந்து, அப்கிரேடு, அன்அகாடமி, கிரேட் லேனிங், ஒயிட்ஹேட் ஜூனியா் மற்றும் சன்ஸ்டோன் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் முறைகேடான வா்த்தக நடைமுறைகள் மற்றும் தவறான தகவல்களின் பேரில் ஆா்வத்தை தூண்டும் விளம்பரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்திய கல்வி தொழில்நுட்ப சூழல்முறையில் நுகா்வோா் நலனை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து செயலாளா் ரோஹித் குமாா் சிங் விவாதித்தாா்.

சில விளம்பரங்கள் தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவா், நுகா்வோரை நலனை பாதுகாக்கத்தக்கவகையில், உரிய நடைமுறைகளை பராமரிப்பது அவசியம் என்று வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.