கேரளத்தில் தீவிரமடையும் பருவ மழை: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கேரளா: கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கேரளத்தில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இந்நிலையில் கேரளா முழவதும் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதுகுறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிக்கை விடுத்துள்ளது. அதில், ஜூலை 5-ம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.  மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்க உத்திரவிட்டுள்ளது.

கோழிக்கோடு, வயநாடு உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்கியது. சென்ற ஆண்டு ஜூன் 3-ல் தொடங்கியது. இந்தாண்டு ஓரிரு நாள்களுக்கு முன்பே தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com